/ கட்டுரைகள் / மூன்றெழுத்து தலைப்புகளில் முக்கியத் தகவல்கள்...
மூன்றெழுத்து தலைப்புகளில் முக்கியத் தகவல்கள்...
இயற்கையை புரிந்து கொள்ளும் நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால். கோட்டை, சாணம், தெய்வம், துட்டு, பறவை, பாட்டு, மலர், மரம், உணவு, ஊரணி என்ற தலைப்புகளை மையப்படுத்தி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.செஞ்சி கோட்டை, புனித ஜார்ஜ் கோட்டை, டேனிஷ் கோட்டைகளின் சிறப்புகளும், வரலாற்று நிகழ்வுகளும் எடுத்து சொல்லப்பட்டுள்ளன. கழிவு பொருளான சாணத்தின் மகத்துவம் பற்றிய தகவல்கள் உள்ளன. ஆராதிக்கும் தீபம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. பறவைகளும், அவற்றின் புகலிட சிறப்புகளும் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வலசை செல்லும் பறவைகள் பட்டியல் தரப்பட்டுள்ளது. இயற்கை பற்றி விவரித்துள்ள நுால். – புலவர் சு.மதியழகன்