/ கட்டுரைகள் / அன்னம் வழங்கு ஆண்டவனை வணங்கு
அன்னம் வழங்கு ஆண்டவனை வணங்கு
"தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று ஆன்றோரும் சான்றோரும் கூறுவர். அப்படிப்பட்ட அன்னதானத்தின் பெருமையை இந்நூல் விளக்குகிறது.வராகப்புராணத்தில் காணும் சுவேதராஜன் கதையை விளக்கி, இந்நூலாசிரியர் அன்னம் வழங்குதலின் சிறப்பைக் கூறுகிறார்.தானம் என்பது பிச்சை இடுவது அல்ல என்று இராமன்-இலட்சுமணன் நிகழ்ச்சி மூலம் விளக்குவதும் (பக்.28), சுவேதராஜன் அன்னதானத்தின் உயர்வைத் தெரிந்து கொண்டதும் (பக் 64-90) ஆகிய செய்திகளை இந்நூலாசிரியர் மிக நன்றாக எழுதி<யுள்ளார்.எளிய, இனிய தமிழில் இந்நூல் அமைந்துள்ளது. அனைவரும் விரும்பிப் படிக்கலாம்.