/ கதைகள் / ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள்
ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள்
ஓஷோவின் 70 குறுங்கதைகள் வாயிலாக கருத்துகள் அழகிய வடிவில் நுாலாக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையைப் பற்றிய கண்ணோட்டத்தை மகாத்மா காந்தி அணுகிய முறை; ரோஜாச் செடியை முன்வைத்து உணர்த்தும் தடைகளுக்குப் பயப்படாதீர்கள் என்ற தலைப்பில் அமைந்த கருத்து; நல்ல மனம் மட்டுமே நாம் சென்று அடையக்கூடிய நல்ல பாதையைக் காட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மன்னனுக்கும், சோதிடருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்றவை சிறப்பாக உள்ளன.ஜமீன்தாருக்கு உழைப்பின் பெருமையை உணர்த்திய பட்டறைக்காரனின் பண்பு; குரங்கிலிருந்து தான் மனிதப் பிறப்பு உருவானது என்பதை மறுக்கும் குரங்கு எல்லா தீய குணங்களுக்கும் மனிதன் தான் காரணம். எனவே, நம் இனத்தில் இருந்து மனிதன் தோன்றியிருக்க வாய்ப்பில்லை போன்ற குறுங்கதைகள் வாழ்வுக்கு வழிகாட்டுவன. – ராம.குருநாதன்