/ வாழ்க்கை வரலாறு / ருக்மிணி தேவி ஒரு கலை வாழ்க்கை
ருக்மிணி தேவி ஒரு கலை வாழ்க்கை
இந்திய பண்பாட்டு வரலாற்றில் பரதநாட்டியம் இடம்பெறுவதற்கு அடித்தளமாக இருந்தவரும், கலாஷேத்திரா நடனப் பள்ளியை நிறுவியவருமான ருக்மிணி தேவி அருண்டேலின் வாழ்க்கை வரலாற்று நுால்.ருக்மிணி தேவியின் பயனுள்ள வாழ்க்கை நிகழ்வுகளையும், ஒரு வட்டத்தில் அடைந்து கிடந்த நடனக் கலையை நவீனப்படுத்த நடத்திய போராட்டங்களையும் விறுவிறுப்பாக விவரிக்கிறது. ஒரு பெண்ணின் ஆளுமைத் திறனை மட்டுமின்றி, அவர் வாழ்ந்த காலத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இசை, நடனம், பெண்ணியம், கல்வி என பல்துறைகளில் ஆர்வமுடன் செயலாற்றியதை எடுத்துரைக்கிறது. எளிமையான தமிழ்நடையில் சுவாரசியமாக அமைந்துள்ள அற்புதமான வாழ்க்கை வரலாற்று நுால்.– ராம்