/ வரலாறு / சங்கக் கால அரசர்களுள் புலவர்கள்
சங்கக் கால அரசர்களுள் புலவர்கள்
மன்னர்கள் மற்றும் புலவர்களின் வரலாற்றின் சிறப்புகளை அறியும் வகையில் அமைந்துள்ள நுால். மன்னர்கள் மற்றும் புலவர்களின் படங்களை காட்சிப்படுத்தியுள்ள விதம் சிறப்பாக உள்ளது. முச்சங்கங்கள் பற்றிய தெளிவை பெற முடிகிறது. தொல்காப்பியமும், திருக்குறளும் பாண்டியர் காலத்தில் அரங்கேற்றப்பட்டதை பற்றி அறியத் தருகிறது. நல்ல படைப்புகளை கண்டறிய உதவுகிறது. பயன் மிகுந்ததாக அமைகிறது. பண்டைய அரசர்களின் செயல்பாட்டை அறிய உதவுகிறது.அரசர், புலவர்களின் செயல்களை மதிப்பிடும் திறனாய்வுகள் உள்ளன. பறம்பு மலையை ஆண்ட பாரி மன்னனையும், சங்க கால அரசியலையும் எடுத்துக் காட்டுகிறது. ஆய்வாளர்களுக்கு பயன்படும் நுால்.– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்