/ ஆன்மிகம் / சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமி அய்யப்பனின் புகழ் மிக்க வரலாற்றை எளிய நடையில் தரும் ஆன்மிக நுால். வயதில் பெரியோர் வழியாக அறிந்த தகவல்கள், மாளிகைப்புறம் சன்னதியில் அய்யப்பன் வரலாற்றை சொல்லும், ‘பறைக்கொட்டு’ பாடல்களை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுவாமி அய்யப்பன் புராண வரலாறு, அய்யப்பன் கோவிலில், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ கோஷம் முழங்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது போன்ற தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. பல்வேறு புராணக் கதைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. காஞ்சிப் பெரியவர் அருளிய, ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில், மூக்கில் விரல் வைத்து சிந்தனை செய்யும் அய்யப்பன் பற்றிய தகவல் தந்துள்ளது முத்தாய்ப்பாக உள்ளது.– இளங்கோவன்