/ மருத்துவம் / சித்தர்களின் மூலிகை வைத்தியம்

₹ 150

சித்த வைத்தியம் தொடர்பாக தகவல்கள் கூறும் நுால். அண்டமும், பிண்டமும் ஒன்று என்பதை ஐம்பூதங்களுடன், மனித உறுப்புகளின் இயக்கம், உணர்வுகளுக்கு தொடர்பிருப்பதாக கணிக்கிறது. இயற்கையின் பருவகாலங்கள் போல, மனித பருவகாலத்திற்கும் ஐம்பூதங்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறுகிறது. ஆத்மாவில் ஒடுக்கப்பட்ட உயிர், வந்த வழியே பிரியும் என்கிறது. வாதம், பித்தம், கபம் பற்றி விவரிக்கிறது. இவை மிகுவதாலும், குறைவதாலும் நோய்கள் ஏற்படுவதாக விளக்குகிறது. மூலிகை வகைகள்-, மரம், செடி, கொடி, புல், பூண்டு பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. இஞ்சி, சுக்கு, கடுக்காய், பிரண்டையின் மருத்துவ குணத்தை விளக்குகிறது. சித்த வைத்திய நுால். – முனைவர் கலியன் சம்பத்து


சமீபத்திய செய்தி