/ இலக்கியம் / சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு
சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை முதல், மலைபடுகடாம் ஈறாக இடம்பெற்றுள்ள செய்திகளை விவரிக்கும் நுால். பா வகை, பாடு பொருள், பொருண்மை, இலக்கிய நயம், இடம் பெற்றுள்ள திணை விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படையின் தனித்துவம், நச்சினார்க்கினியர் எழுதிய உரை சிறப்பு, எண்மர் பாடிய பத்துப்பாட்டில் நக்கீரரும் உருத்திரங்கண்ணனாரும் பாடிய செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன. எட்டுத்தொகை மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு எவை என்பதும் நிரல்படுத்தப்பட்டுள்ளது. கற்பனை வளமும், கருத்துச்செறிவும் சுவைபட சொல்லப்பட்டுள்ள நுால்.– புலவர் சு.மதியழகன்