/ சமயம் / தாயார் சன்னதி
தாயார் சன்னதி
எழுத்துலகில் கொடிகட்டி பறக்கும் திருநெல்வேலி சீமையில் இருந்து உருவாகி இருக்கும் உன்னத எழுத்தாளர் சுகா. அந்த மண்ணின் மணம் புத்தகம் எங்கும் பரவி கிடக்கிறது. அவர்களின் சொல் வழக்கு, வாழ்வு முறைகள், நகைச்சுவை உணர்வு, பிறர் மனதை நோகடிக்காத கேலியும், கிண்டலும் என தன் வாழ்வு அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். கட்டுரைகள் முழுக்க நிறைய நிஜ கதாபாத்திரங்கள் வலம் வருகின்றனர். அவர்களின் வாழ்வியல் அனுபவங்களை, சின்னச்சின்ன சம்பவங்களாக, உரையாடல்களாக சுகா பதிவு செய்திருக்கிறார். எந்த ஊருக்கு சென்றாலும், பிறந்த மண்ணை மறப்போமா? நெல்லையின் நினைவுகளை, தாயார் சன்னதியில் சமர்ப்பித்திருக்கிறார் சுகா.




