/ ஆன்மிகம் / திருக்கயிலையில் நாதோபாஸனை
திருக்கயிலையில் நாதோபாஸனை
திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் இந்திய யாத்ரீகர்கள், நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும், மானஸரோவரும் இந்தியாவில் இல்லை; இரண்டுமே மேற்கு பகுதி இமயத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட புனித தலங்களை சிரமங்களுக்கு இடையே தரிசித்து, அனுபவங்களை எளிய நடையில் புரிந்து அனுபவிக்கும் வகையில் எழுதியுள்ளார்.நேரில் சென்று அந்த தலங்களை தரிசித்த அனுபவத்தை, நுாலைப் படிப்பதன் மூலம் பெற முடியும். அந்த புனித தலங்கள் குறித்தும், செல்லும் வழியில் கண்ட காட்சிகளையும் விவரித்துள்ள விதம், மனக்கண் முன் வீடியோ ஓடுவது போன்ற அனுபவத்தை அளிக்கிறது. திருக்கயிலாயத்தை தரிசிக்க விரும்புவோருக்கும், நேரில் செல்ல இயலாதவர்களுக்கும் இந்த புத்தகம் வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.– இளங்கோவன்