/ கட்டுரைகள் / உ.வே.சாமிநாதையர் அணிந்துரைகள் -சிறப்புப்பாயிரங்கள்
உ.வே.சாமிநாதையர் அணிந்துரைகள் -சிறப்புப்பாயிரங்கள்
உ. வே.சாமிநாதையர் எழுதிய பாயிரம் கட்டுரைகளின் தொகுப்பு நுால். புத்தகங்களின் சிறப்பை சுருங்கச் சொல்லி விளக்குகிறது. பாயிரம் அணிந்துரை, அபிப்ராய பத்திரம், பாராட்டுரை, சிறப்புப் பாயிரம், சிறப்புரை, நந்தி செய்யுள், நல்லுரை, நற்சாட்சிப் பத்திரம், நன்மதிப்புரை, நுான்முகம், புகழ்ப்பூந்துணர், பாராட்டுரை, முகவுரை, முன்னுரை, வாழ்த்துரை எனவும் அழைக்கப்படுகிறது. தமிழறிஞர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்புப் பணியிலும், தமிழ்ப் புலமையிலும் புகழ் பெற்றவர். அக்காலத்தில் பலரது நுால்களுக்கு உ.வே.சா., வழங்கிய பாயிரங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். – சிவா




