/ இலக்கியம் / வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும்

₹ 150

இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் நடந்த சமீபகால சில நிகழ்வுகள் பற்றி, ‘தினமலர்’ முதலான சில நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் கருவாகக் கொண்டு, அந்த நிகழ்வுகளோடு திருக்குறட்பாக்களை பொருத்திக் காட்டுகிறது இந்த நூல். ‘மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை’ எனும் குறட்பாவுக்கு இந்து, முஸ்லிம் பெண்கள் முறையே முஸ்லிம், இந்து பெண்களின் கணவர்களுக்கு, தங்களின் சிறுநீரகத்தை தானமாக கொடுத்த நிகழ்வையும், ‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான்கண் படின்’ எனும் குறட்பாவிற்கு, தான் அரிதின் முயன்று ஈட்டிய, 80 கோடி ரூபாயை, தன் சொந்த கிராமத்திற்கு வழங்கிய டாக்டர் பற்றிய செய்தியையும், ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ எனும் குறட்பாவிற்கு ஓர் ஆட்டோ ஓட்டுனரின் தமிழ்த் தொண்டையும் சான்றாக காட்டுகிறது இந்த நூல்.புலவர்.சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை