/ கட்டுரைகள் / வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு சில யோசனைகள்
வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு சில யோசனைகள்
துணையை இழந்தவர்கள், துணிவுடன் வாழ்வை எதிர் கொள்ளும் வகையில் கருத்துக்களைக் கூறும் நுால்.முதல் அறிவுரையாக, கடன் வாங்காதீர் – கொடுக்காதீர் என்று உள்ளது. அடுத்து இசையில் மனதை ஈடுபடுத்தச் சொல்கிறது. பிறருக்கு உதவுவது சிறப்பானது; அதனால், சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது போன்ற அறிவுரைகளை கொண்டுள்ளது.இழந்ததை எண்ணி வருந்தினால், உடல், மனம் பாதிக்கலாம் என்பதால், கவனமாக இருக்க அறிவுறுத்துகிறது. துணை இழந்த சோகத்தால் பக்கத்து வீட்டு நல்லது கெட்டதை விசாரிக்காமல் இருக்கக் கூடாது; விசாரிப்பது மன நிறைவைத் தரும் என சுட்டுகிறது. வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு உதவும் புத்தகம்.– சீத்தலைச் சாத்தன்