உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
கவிதையைத் தனது சுயத்தின் முழக்கமாக அல்லாமல் தினசரி வாழ்வின் பதிவாகவும் செய்தியாகவும் கதையாகவும் அணுகும் கவிமரபில் புதிதாக இணைந்து கொள்பவர் மாதங்கி. பலமொழிக் கலாச்சாரம் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாட்டில் வாழும் தமிழர்களின் சுய அடையாளங்களை மிக நேரடியாக எளிய மொழியில் முன்வைக்கும் இக்கவிதைகள் குழந்தைமையின் பரவசத்தையும் அன்னியமாதலின் துக்கத்தையும் வெளிப்படுத்துபவை. இது மாதங்கியின் முதல் தொகுப்பு.