சமூக அவலங்களை சந்திக்க சிரிக்க வைக்கும் நாவல் நுால். இதில் வரும் கதாபாத்திரங்கள் போல் பிரசார பீரங்கிகள் இருந்தால்தான் சமுதாயத்துக்கு நல்லது. தாம்பத்யத்தை விரும்பாத பெண்ணை பார்க்கிறோம். இளமைத் துடிப்பில் தறிகெட்ட பெண்ணையும் பார்க்கிறோம். வித்தியாசமான கதாபாத்திரங்கள்.
அலைபேசி வழியாக நடக்கும் சீரழிவுகளை துல்லியமாக படம் பிடிக்கிறது. ஆரோக்கியமாக இருக்கிறதை விட சிறந்த விஷயம் எதுவுமே இல்லை என்கிறது. படிக்க வேண்டிய நாவல்.