ஆரோக்கியமான உடல், மகிழ்வான மனம், வளமிக்க வாழ்க்கை குறித்து விளக்கும் நுால். மனித கரு உருவாவதற்கு, கோள்களின் அலை வீச்சு, கூட்டுக் காந்தக்களம், நட்சத்திரத் தொகுதிகளில் இருந்து வரும் அலைவீச்சு ஆகியவை தான் நுண்ணுயிர் தோன்றுவதற்கு காரணம் என கூறுகிறது.
இயற்கையாக உள்ள இன்பங்களை அடைய இயலாமைக்கு, மனமே காரணம் என்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் விளைவு மாறுவதில்லை என விளக்கம் தரும் நுால்.