முகப்பு » இலக்கியம் » உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்-1

உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்-1

விலைரூ.80

ஆசிரியர் : எம்.நாராயணவேலுப்பிள்ளை

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208)

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டகேசி ஆகிய ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் அன்னைக்கு எழில் கூட்டி, மெருகூட்டும் அணிகலன்கள். கி.பி.இரண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இவை சமண - புத்த சமயங்களைச் சார்ந்திருப்பினும், திருக்குறளுடனும் ஒத்துப் போவதாக அமைந்துள்ளன.ஒவ்வொரு காப்பியத்திற்கும் கதைச் சுருக்கம், பாத்திரப் படைப்பு, ஆசிரியர் மற்றும் நூல் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ஆய்வுக் குறிப்புகள், அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள உதவும் பொருட்டு, சமண, புத்த சமயங்களின் சிறப்புத் தன்மைகள் ஆகியவை இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் அன்னதானம், புலால் மறுத்தல், இளமை - செல்வம் நிலையாமை, பொய்யாமை, மாதர் கற்பு - போன்ற நற்பண்புகள் இந்தக் காப்பியங்களில் பொதுவாக வலியுறுத்தப்படுகின்றன.இளம் துலைமுறையினர் இத்தகைய காப்பியங்களைப் படித்து அறிந்து கொள்ளும் பொன்னான வாய்ப்பைப் பெறுவதுடன் நற்பண்புகளை மேம்படுத்திக் கொள்ளத் தூண்டிவிடும் பொற்கிண்ணம் இந்நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us