கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை -17. பக்கம்:728.
கவுதம புத்தரின் காலம், அவரது வாழ்க்கை, அவரது போதனைகள் பற்றி, படித்து ஆராய்ந்து, விரிவாக, விளக்கமாக இந்த நூலை எழுதியிருக்கிறார் கவுதம நீலாம்பரன். ஆறு ஆங்கில நூல்கள் உட்பட 40 நூல்களை ஆய்வு நோக்குடன் கூர்ந்து, படித்து, தன்னுடைய பார்வையையும் பதிவு செய்து இந்த மிகச் சிறந்த பொக்கிஷத்தை, தமிழ் கூறும் உலகுக்கு வழங்கியுள்ள நூலாசிரியருக்கு தமிழ் எழுத்துலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.