முகப்பு » கட்டுரைகள் » வ.வே.சு.ஐயரின் கட்டுரைக் களஞ்சியம்

வ.வே.சு.ஐயரின் கட்டுரைக் களஞ்சியம்

விலைரூ.125

ஆசிரியர் : பெ.சு.மணி

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ்த் தென்றல் திரு.வி.க., பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ராய.சொக்கலிங்கம் செட்டியார், பரலி.சு.நெல்லையப்பர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மற்றும் பலராலும் புகழப்பட்டவர் வ.வே.சு.ஐயர் ஆவார். இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வீரரான இவர், தமிழ் வளர்த்த சான்றோர்களில் ஒருவராகவும் விளங்கியதை, இந்நூல் தெளிவாகக் கூறுகிறது.
இந்நூலில் உள்ள வ.வே.சு.ஐயரின் கட்டுரைகளைப் படிக்கும்போதும், கட்டுரைகளின் முடிவில், தொகுப்பாசிரியரின் குறிப்புகளைப்   படிக்கும்போதும், அவரது தூய சிந்தனை குறித்து வியக்கிறோம். பாபநாசம் அருவிக்கு குருகுலம் மாணவர்களுடன் உல்லாசப் பயணம் சென்ற போது, அருவியில் விழுந்த தம் மகள் சுமத்திராவைக் காப்பாற்ற முயன்றபோது, இவரையும் அருவி விழுங்கியது என்பதைப் படிக்கும்போது, படிப்போரின் கண்கள் கலங்கும் என்பது உறுதி. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us