ஒவ்வொரு வாழ்விலும் தனிமை என்பது தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். தனிமை, மனிதனின் இயல்பு நிலையைச் சிதைக்கிறது; மகிழ்ச்சியை வற்றி போகச் செய்கிறது. இத்தகைய கொடிய நிலையை இல்லாமல் செய்யும் வரம் தான் நம் நண்பர்கள். நட்புறவு என்பது சொர்க்கச் சுகத்தை முன்னதாகவே சுவைக்க உதவும் தருணங்களின் உருவாக்கம். ஒழுங்கை கடைபிடித்து வாழ்வது எத்துணை இன்றியமையாதது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்நுால்.