கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா என்பது சமூக அவலங்களை எடுத்துக்கூறும் நாவல் ஆகும். பெரும்பாலான நாவல் ஆசிரியர்கள், காதலை மையமாக வைத்தே நுாலை படைப்பர். அதைபோலவே, வழக்கம் போல இந்த நுாலும், காதலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது என்றாலும், குடும்பத்தில் ஏற்படுகிற சிக்கல்களையும், அந்த சிக்கல்களை சந்திக்கும், எதிர்கொள்ளும் வழிகளையும் எடுத்துக் கூறுவதாக அமைந்திருப்பது சிறப்பாகும். நகைச்சுவைகளும், நையாண்டிகளும் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. – முனைவர் க.சங்கர்