புத்துணர்ச்சியுடன் நம்பிக்கை ஊட்டிய தலைவர்கள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து தரும் நுால். திருப்பூர் குமரனின் தியாகமும், வீரமும் உள்ளது உள்ளபடி தரப்பட்டுள்ளது.
காமராஜரை பெருந்தலைவர் என்று குறிப்பிடாமல், மாபெருந்தலைவர் என அவரது செயல்திறத்தின் சிறப்பை உணர்த்தியுள்ளது. உ.வே.சாமிநாதையர் படைத்துள்ள என் சரித்திரத்தில் இருந்து வரலாற்று தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அரசியல், ஜாதி, மத தடைகள் இன்றி தலைவர்களின் செயல்களை நேராக அணுகி எழுதப்பட்டுள்ளது. தொடர்புடைய படங்களை அங்கங்கே தந்துள்ளது சிறப்பாக உள்ளது. நெப்போலியனின் குதிரை வேகத்தை உணரும் வகையில் அமைத்திருப்பது வியப்பிற்கு உரியது.
– முகிலை ராசபாண்டியன்