எழுத்தாளர் ஜே.கே.ரோலிங்; வெளியீடு: வானவில் புத்தகாலயம், 29/ (7/3) "ஈ' பிளாக், முதல் தளம், மேட்லி சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 80.)
வாழ்க்கை வரலாற்று நூல் வரிசையில் இந்த ஜே.கே. ரோலிங் வரலாற்றையும் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஹாரிபாட்டர் நூல்களை எழுதிய ஆசிரியரின் வரலாறு என்பதாலேயே இது சிறப்புத்
தகுதியைப் பெறுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்கிறது.
அதை வெளிக்கொண்டு வந்து விட்டால் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்பதற்கு, இந்த எழுத்தாளர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். எனவே, சாதிக்க நினைப்பவர்களின் சாதனை தாகத்தை இந்த நூல் தூண்டும் என்று நம்பலாம். எழுத்தின் மூலமாக மிகுதியாகப் பொருள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்ற ஜோன் கேத்தலீன் ரோலிங்கின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது.