/ கதைகள் / மன வலிக்குக் கிடைத்த நட்பென்ற மருந்து
மன வலிக்குக் கிடைத்த நட்பென்ற மருந்து
சிறு கதைகள் அடங்கிய புத்தகம். நட்பின் பெருமையை, அருமையை எடுத்துச் சொல்கின்றன. மாணவச் செல்வங்கள் அவசியம் படிக்க வேண்டியவை. நட்பில் பலவிதம் இருந்தாலும் நட்பு என்ற பண்பு ஒன்று தான்; உன்னை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் உன் நண்பனை புரிந்து கொள் போன்ற அறிவுரைகள் உள்ளன. நட்பிற்கு பணம் தேவையில்லை குணம் தான் முக்கியம். ஒற்றுமை தான் உண்மை நட்புக்கு உதவும். சுயநலம் உள்ள நட்பை ஒதுக்க வேண்டும். இது போன்ற கருத்துகள் நிறைந்துள்ளன. ஆண், பெண் களங்கமில்லாத நட்பு காலமெல்லாம் தொடரும். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் பாசமுள்ள நட்பு தான் பாக்கியம். இதுபோல் கருத்துகளை போதிக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்