/ இலக்கியம் / கம்பன் காவியம்

₹ 45

பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-108. (பக்கம்: 152) கம்பராமாயணத்தில் ஆய்வும் தோய்வும் கொண்ட பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்களின் அழகிய தமிழ் நடையும், ஆழ்ந்தகன்ற அறிவும் புலப்படும் நூல் இது. எட்டு தலைப்புகள் கொண்ட இந்நூலில், "கம்பனைக் கற்கும் நெறிகள் சொல்லப்பட்டுள்ளன; கம்பராமாயணத்தை ஜைன ராமாயணத்தோடு ஒப்பீடு செய்து எழுதப்பட்டுள்ளது; "கம்பனும் தமிழும் பற்றி விரிவுரை தரப்பட்டுள்ளது. ராமாயணப் பதிப்புகள் பற்றியும், கம்பன் எப்படி கவிச்சக்கரவர்த்தியானான் என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. என்றும் படித்து இன்புறத் தக்கது இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை