/ வரலாறு / மறைக்கப்பட்ட பாரதம்

₹ 150

ஆங்கிலேயர் வந்த பின் தான் இந்தியா கல்வி வளர்ச்சி பெற்றது; பொருளாதாரம் சீரானது; அறிவியல் அறிவு கிடைத்தது என்ற கூற்று மிகவும் தவறானது என தெளிவு ஏற்படுத்தும் நுால். நம் நாட்டில் பாரம்பரிய கல்வி வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை உரைக்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்ட கலப்பை, ஐஸ் மற்றும் எக்கு தயாரிப்பு தொழில்நுட்பம், கட்டடம் அமைக்கும் முறை, வேதிப்பொருட்களின் பயன்பாடு பற்றிய செய்திகள் உள்ளன. பண்டைய இந்தியாவில் சிறந்து விளங்கிய வான சாஸ்திரம், சூரிய சந்திர நகர்வுகள், கிரகணங்களை துல்லியமாக கணிப்பதில் பெருமையுடன் விளங்கிய அறிவு புதையல் போன்றவற்றை விளக்கும் நுால். – இளங்கோவன்


புதிய வீடியோ