/ வாழ்க்கை வரலாறு / முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்வும் தொண்டும்

₹ 200

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பன்முக செயல்பாடுகளை விவரிக்கும் நுால். பள்ளி பருவத்திலே அமைப்புகளை தொடங்கி நடத்தியதுடன், மாணவ நேசன் என்ற கையெழுத்து இதழையும் வெளியிட்டதை குறிப்பிடுகிறது. குடியரசு, திராவிட நாடு, முரசொலி போன்ற இதழ்களில் முத்திரை பதித்ததை அறிய தருகிறது. நாடகம் எழுதியதன் வாயிலாக துவங்கிய கலை பயணத்தை விவரிக்கிறது. சினிமாவுக்கு கதை, வசனம் எழுதிய பாங்கு பற்றி உரைக்கிறது. மனோகரா, மந்திரிகுமாரி படங்களில் படைத்த பெண் பாத்திரங்கள் காலத்தை வென்று நிற்பதை எடுத்துரைக்கிறது. அரசியல் வாழ்வில் சாதனைகளும், சந்தித்த சோதனைகளும் கடந்து வந்த பாதையையும் காட்டும் நுால். – புலவர் சு.மதியழகன்


வாசகர்கள் கருத்துகள் (1)

Madhusoodhanan Ramachandran
ஜூலை 31, 2026 07:22 PM

எவ்வளவோ பேர் தமிழுக்காக யார் விட்டவர்கள் சிறைய்ய சென்றவர்கள். அவர்கள் பெயர்கள் மழுங்க்கடிக்க பட்டுள்ளதே இதற்கு யார் யார் காரணம். கலாம் என்ற பெயருக்கு திருடன் என்று மொழி பெயர்த்தவர் எதை சேர்ந்தவர்? உதாகிவக்கரை விஞ்சான திருடன் என்ற அடை மொழியுள்ளவர்களையெல்லாம் முத்தமிழ் வித்தகர் எல்லாம் என்றால் அயல்நாட்டினர் சிரிப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை