/ வரலாறு / நாட்டிற்கு உழைத்த நல்லவர்கள் பற்றி பள்ளிகளுக்கான பாடல்கள்

₹ 100

நாட்டுக்காக உழைத்தோரின் சிறப்பியல்புகளை பாடல்களாக தரும் நுால். நாட்டு முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு எளிய நடையில் கூறப்பட்டுள்ளது. காந்திஜி பற்றி, ‘அழிவால் வெற்றி வேண்டாமென்று அகிம்சையில் போராட நினைத்தாராம்; ஆயுதம் இல்லாத போராட்டத்தில் அச்சம் கொண்டனர் ஆங்கிலேயர்...’ என புகழ்ந்துரைக்கிறது. முதல் பிரதமர் நேருவை, ‘பஞ்ச சீலக் கொள்கையை பார் புகழத் தந்தவர், நேர்மை குணம் கொண்டவர், நேரு மாமா நல்லவர்...’ என போற்றுகிறது. தலைவர்களின் சிறப்பை கூறும் நுால். – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ