/ கட்டுரைகள் / சும்மா இருப்பதே சுகம்
சும்மா இருப்பதே சுகம்
ஆர்வத்தை துாண்டும் வகையில் 11 கட்டுரைகளை உடைய நுால். அரிச்சந்திரன், காந்திஜியை முன்வைத்து, தேவையான இடங்களில் பொய் கூறுவது தவறில்லை என்பதை முதல் கட்டுரை விளக்கியுள்ளது. சமயங்கள் தமிழ் மொழியை வளர்த்த விதம் பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சங்க காலம் முதல் பவுத்தம், சமணம், சைவம், வைணவ சமயங்கள் தமிழ் மொழியை வளர்க்க பாடுபட்டது குறித்து விளக்கமாக உள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு உதாரணமாக, செய்யுள்களை காட்டி கருத்துக்கு வலு சேர்க்கிறது. திருவாசகத்தை மேற்கோளாக கொண்டு அறிவியல் உணர்த்தும் உண்மைகள் விளக்கி கூறப்பட்டுள்ளன. அண்டவெளி, மனிதக்கரு வளர்ச்சி நிலைகளை குறிப்பிடும் தகவல்கள் யோசிக்க வைக்கின்றன. புதுமையுடன் ஆர்வத்தை துாண்டும் நுால். – முகில்குமரன்