/ ஆன்மிகம் / தமிழர்களை காக்கும் சமய நூல்கள்
தமிழர்களை காக்கும் சமய நூல்கள்
ஆன்மிக தேடலுடன் உருவாக்கப்பட்டு உள்ள நுால். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழகத்தை ஆன்மிக பூமியாய் ஆக்கியதை உதாரணங்களுடன் முன்வைக்கிறது. கொடை, அன்னதானம், அற வழியில் பொருள் ஈட்டல், இல்லறம், துறவறம், மக்கட்பேறு, கோவில் வழிபாடு போன்ற நற்செயல்கள் குறித்த செயல்பாடுகள் சொல்லப்பட்டு உள்ளன. ஊரில் கோவில் எழுப்பும் பகுதி, நந்தவனம், கோபுரங்கள் கட்டும் முறை பற்றிய ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. குடமுழுக்கு, யாகசாலை திருவிழாக்கள் பற்றிய விபரங்களும் உள்ளன. சிலப்பதிகாரம் கூறும் சிவன், முருகன், கண்ணன் கோட்டங்கள், திருமந்திரம் கூறும் வழிபாட்டு முறைகள் விவரிக்கப்பட்டு உள்ளன. தமிழர் போற்றும் சமயங்கள் பற்றிய நுால். – முனைவர் மா.கி.ரமணன்




