/ ஆன்மிகம் / தென்நைமிச நரசிங்கன் துதி மற்றும் சுந்தரகாண்டம்
தென்நைமிச நரசிங்கன் துதி மற்றும் சுந்தரகாண்டம்
கர்நாடக மாநிலத்தில், தென்நைமிச நரசிங்க பெருமாள் கோவில் பற்றிய நுால். ஆழ்வார் பாசுர கருத்துகளையும் உள்வாங்கியுள்ளது. நைமிசாரண்யம், வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. உள்ளேயும் வெளியேயும் நின்றார் வந்தார் என நரசிம்மமூர்த்தி பற்றி பாடப்பட்டுள்ளது. கம்பராமாயணச் சொற்கள் அப்படியே இடம் பெற்றுள்ளன. தென்நைமிசத்தில் எழுந்தருளியுள்ள மூலவர், உற்சவர், கருடன், சிறிய திருவடி உட்பட அனைத்தையும் வர்ணிக்கிறது. நைமிசாரண்யப் பெருமாள் உலகை வயிற்றில் உடையவன்; உலகை காக்கும் வல்லமை பெற்றவன் என்கிறது. ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தையும் அறிய வழிகாட்டும் நுால்.– பேராசிரியர் ரா.நாராயணன்