முகப்பு » ஆன்மிகம் » வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்

வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்

விலைரூ.50

ஆசிரியர் : மா.கி. இரமணன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
பூங்கொடி பதிப்பகம் மயிலாப்பூர், சென்னை.600 004. (பக்கம் 136)

புத்தகத்தின் தலைப்பே வாழ்வை வளமாக்கும் திருமந்திரம் என்பதாகும். முன்னுரையில் கம்பன்கழகத்தின் பழனியப்பன் குறிப்பிடும் போது, `திருமந்திரம் என்பது யாரும் பயப்பட வேண்டியதன்று' என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பது இந்த ஆசிரியர் எழுத்துக்குச் சான்றாகும் என்றிருக்கிறார். ஒருபக்க அளவில் திருமூலரின் ஒரு பாடலை விவரிப்பது என்பது சுலபம் அல்ல. அதற்குச் சான்றாக 47வது தலைப்பாக `பன்னிரண்டு மாத கர்ப்பம்' என்ற தலைப்பில் அமைந்த விளக்கம் சிறப்பானது. மரபணு, குளோனிங் ஆகியவைகளுடன் விளக்கி `குயில் குஞ்சு முட்டையைக் காக்கை கூட்டில் இட்டால்' என்பதற்குத் தரப்படும் நய உரை சிறப்பானது .

மொத்தம் 50க்கும் மேற்பட்ட தலைப்புகளில், அறிவியல், ஆளுமைத்திறன் ஆகியவைகளை திருமூலர் பார்வையில் ஆசிரியர் விளக்கியிருப்பது அருமை. ஆன்மிகப் பேச்சாளர் என்ற முறையில் திருமந்திரத்திற்கு பெருமை தரும் நூலைச் சிறப்பாக உருவாக்கிய முயற்சிக்குப் பாராட்டுதல்கள் .

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us