படிப்பறிவும், பண வசதியும் அதிகமில்லாத போதும், வாய்ப்புகளை பயன்படுத்தி உன்னத நிலையை எட்டிய வி.ஜி.பன்னீர்தாஸ் சிந்தனை ஓட்டத்தை தெள்ளிய நடையில் தரும் நுால்.
அன்பு தான் சிறந்த மதம் என்ற கோட்பாட்டை சொல்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் அருள் உரைக்கு இணங்க, கலவையில் சங்கர மடத்திற்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததே அதற்கு அத்தாட்சியாக உள்ளது.
தவணை முறையில் ரேடியோ விற்பனையில் துவங்கி, வீட்டு மனை வரை விற்றதை கூறுகிறது. இங்கிலாந்து, பகிங்ஹாம் அரண்மனையில் கற்றதை, தங்க கடற்கரையில் சிலை மனிதனாக நிறுத்தி, மக்களை மகிழ வைத்திருப்பதை பூரிப்பு செய்தியாக பதிவு செய்துள்ளது. உயர நினைப்போருக்கு உதவும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்