திருக்குறளில் காணப்படும் சமூக மேம்பாட்டு கருத்துகளை ஆய்வு செய்துள்ள நுால். பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழல் சார்ந்த கல்வியை நிறுவும் முயற்சியாக உள்ளது.
அற வழியில் இணங்கி வாழும் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது. சமூகத் தேவைகளை குறள்நெறி கொண்டு தீர்வு கூறும் கருத்தோட்டங்கள் காணப்படுகின்றன.
கல்லாமை, வறுமை, சூது, களவு போன்ற பிணிகளை களையெடுக்க வேண்டியதையும் குறிப்பிடுகிறது. சமூக நல நிர்வாகம், சமுதாயக் கட்டமைத்தல், குழு சமூகப் பணிகள், சமூக நடத்தைகளை தீர்க்கமாக அலசி, கட்டமைப்பை நிறுவ வேண்டியதை வலியுறுத்தியுள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு