முகப்பு » கதைகள் » அனுராதா ரமணனின் சிறுகதைகள்!

அனுராதா ரமணனின் சிறுகதைகள்!

விலைரூ.320

ஆசிரியர் : அனுராதா ரமணன்

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை-108. விலை : 3 தொகுதி தலா ரூ.320. பக்கம் : மூன்று தொகுதி தலா 690.


அனுராதா ரமணன் - தமிழ் எழுத்துலகிலும், வாசகர்களுக் கும் நன்கு அறிமுகமானவர். அவர் எழுதிய ஆயிரக்கணக் கான கதைகளில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று தொகுதிகளாக தொகுக்கப்பட்டு, அருமையாக புத்தக வடிவில் வெளி வந்துள்ளது. அவரது சிறுகதைகளில் சீரியஸ்தனமும், நகைச்சுவையும் இழையோடும். அவரது கதைகளை படிக்கும்போது, நம் அக்கம் பக்கத்து வீடுகளில் நடப்பவைகளையே படம் பிடித்துக் காட்டுவது போல இயல்பான நடையில் அமைந்திருக்கும்.

பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியான சிறுகதைகளைத் தொகுத்து புத்தக வடிவில் வெளியிட்டு, வாசகர்களுக்கு நல்ல விருந்து படைத்திருக்கின்றனர் பூம்புகார் பதிப்பகத்தார். நல்ல விஷயங்களைத் தேடித் தேடி படிக்கும் வழக்கமுள்ள தமிழ் வாசகர்களின் இல்லங்களில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லஷ்மி போன்றவர்களின் படைப்புகள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும், அந்த வரிசையில் இவரது சிறுகதை தொகுப்பும் இடம்பெறும் என்பது நிச்சயம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us