கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136. விலை: ரூ.35)
`கல்கி' இதழில் 15 வாரங்கள் தொடராக வெளிவந்த போதே இந்தக் கதை பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நல்ல சமுதாயத்தின் ஆரோக்கியமான செயல் பாட்டுக்கு ஆணும் பெண்ணும் இரண்டு கால்களாக இருக்க வேண்டும். பெண்ணை மட்டும் ஒடுக்கி, அடுப்பங்கரைப் பிராணியாகவும், படுக்கை அறைப் பொருளாகவும் மட்டுமே சிறுமைப்படுத்தி அடிமை செய்தால் என்ன ஆகும்? ஆகவே தான்... சமுதாய மாற்றம் குறித்து சிந்தித்த பாரதி போன்ற கவிகளும், சிந்தனைவாதிகளும், பெண்ணுரிமை குறித்தும் போராடி இருக்கின்றனர். அந்தத் தடத்தில் - இதோ இன்னுமொரு இலக்கிய வார்ப்பு! மேலாண்மை பொன்னு ஸ்பெஷல்!