கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4.
வாரப் பத்திரிகையில் பணிபுரிந்த திறமையான எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் ஒரு பட்டியல் தயாரித்தால், அதில் ரா.கி.ர.,வுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. ஒரு பொன் விழாக் காலத்திற்கு மேல் இடை விடாமல் சுவாரஸ்யமாக எழுதும் இவருடைய பணிக்கு இதுவரை யாரும் "விழாத் தோரணம்' கூட கட்ட முன் வராதது அதிசயம். ஆச்சர்யம்.
இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் "அண்ணா நகர் டைம்ஸ்' தனிச் சுற்று பத்திரிகையில் வெளி வந்து பலர் பாராட்டைப் பெற்றவை. உலகில் அன்றாடம் நடைபெறும் சின்னச் சின்ன சம்பவங்களை நகைச் சுவையுடன் கட்டுரையாக்கியிருக்கிறார் . தலைப்புகள் தேர்வு செய்த அழகு அவர் எழுத்துச் சிறப்பைக் காட்டுகிறது.ரா.கி.ர., படித்து ரசிக்கலாம் ரசித்து படிக்கலாம்.