முகப்பு » பொது » பொறு புறக்கணி புறப்படு

பொறு புறக்கணி புறப்படு

விலைரூ.120

ஆசிரியர் : க.ப.அறவாணன்

வெளியீடு: தமிழ்க் கோட்டம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
ஆசிரியர்: க.ப.அறவாணன். வெளியீடு: தமிழ்க் கோட்டம், 15, முனிரத்தினம் தெரு, அய்யாவு நாயுடு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29.

வாழ்க்கையில் இடர்கள், துயர்கள், முட்டுக்கட்டைகள், ஏற்று அனுபவித்து தாம் பெற்றவை பிறர்க்கும் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கூறுவதையோ அனுபவப் பகிர்வு என்கிறார் நூலாசிரி யர்.

அறிவுரை வேறு, அறிவுறுத்துதல் வேறு, அனுபவப் பகிர்வு வேறு என்று கூறி, இந்நூல் அனுபவப் பகிர்வு என்பதை 71 தலைப்புகளில் கட்டுரை வடித்து தக்க சான்றுகளோடு அனுபவப் பிழிவைத் தருகிறார்.

இந்நூலில் உயிர்த் தோட்டம், அறிவுத் தோட்டம், பண்புத் தோட்டம், அரசத் தோட்டம், பொருள் தோட்டம், அருள் தோட்டம் என்ற தலைப்புகளில் வியப்பும், திகைப்பும் ஏற்படச் செய்திருக்கிறார்.

வைரத் தொழிலாளி எந்தெந்த இடத்தில் எந்தெந்த கற்களைப் பதிக்க வேண்டுமோ அந்தந்த இடத்தில் பொருத்துவது போல மிகச் சிறப்பான கட்டுரைகளின் வாயிலாக மனிதனாக உருவத்தில் தோன்றினாலும், உண்மையில் மனிதனாகப் போலியாக இருப்பதை எடுத்துக்காட்டி மனிதன் மனிதனாக வாழ வகைகளை வெகு அழகாக, மிகத் தெளிவாகக் கூறியிருப்பது அன்னாருடைய பரந்த உள்ளத்தையும், நுட்பமான அறிவுத் திறனையும் காட்டுகிறது. சிறப்பான சிந்தனைகளை தாங்கிய நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us