கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேசன் தெரு, சென்னை-17. (பக்கம்: 184)
பர்த்ருஹரி வட மொழி இலக்கியத்தில் காவியம் இயற்றுவதில் வல்லவர். பொருளாழம் மிகுந்த சொற்கள் மிக அழகாக இடம் பெற்றிருக்கும் சிறப்புக்களை இவரது கவிதை வரிகளில் பார்க்கமுடியும். வட மொழியான சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள இந்த இரண்டு சதகங்களையும் தமிழ் மொழி பெயர்ப்புடன் நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள மொழிபெயர்ப்பாளர், தமிழ் மொழியிலும் புலமை பெற்றவர் என்பதை நூலைப் படிக்கையில் நாம் தெரிந்து கொள்கிறோம்.