திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவின்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 150 டெம்மி )
இன்றும் கர்ஜனை கேட்கிறது என்ற முன்னுரையே நூலின் சிறப்பை பறைசாற்றி விடுகிறது. வெளிநாட்டினருக்கு நமது மகிமையை உபநிடதங்களின் உட்கருத்தனா வலிமை எனும் மந்திரத்தைக் கொண்டு விளக்கியவர். ஆன்மிகத்தை மறந்தால் அதை விட்டு விலகினால் இந்தியா தன் உயிரை இழக்கும் என எச்சரித்த சுவாமி விவேகானந்தரைப் பற்றிய மற்றுமொரு நூல். ஒரே மகானைப் பற்றிப் பலவிதமான பதிவுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் இந்த நூலும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.
விவேகானந்தரின் அன்பர்களுக்கு புதிய நல்வரவு இந்நூல்.