விலைரூ.90
புத்தகங்கள்
Rating
பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14. (பக்கம்: 152)
"என் எழுத்துக்களுக்கு நான் ஒரு போதும் முலாம் பூசுவது இல்லை, வெற்று அலங்கார வார்த்தைப் பிரயோகங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது கவித்துவமாக எழுதி படிப்பவரைப் பரவசப்படுத்தவோ அல்லது என் அறிவின் பரப்பை வெளிக்காட்டவோ நான் எழுதுவது இல்லை. நான் சொல்ல விரும்புவதை மிக, மிக எளிமையாகச் சொல்லுவது தான் என் வழக்கம் எனும் நூலாசிரியர், "தனிக் குடித்தனங்கள் தரும் படிப்பினைகள் தொடங்கி, "பக்தி மார்க்கத்தில் பெண்கள் முடிய 31 கட்டுரைகளை இதில் தொகுத்துள்ளார். கம்பனை துணைக்கு அழைத்துள்ளார்.சிதைந்து வரும் குடும்ப உறவுகள் வலுப்பெற, குழந்தைகளிடையே ஒழுக்கம் வளர, மனிதர்களிடையே நேயம் மலர சமுதாயப் பொறுப்புடன் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளில் நூலாசிரியரின் அனுபவப் பிழிவுகளாகப் பல நிகழ்வுகள் முன் வைக்கப்பட்டுள்ளன."பாரதப் பெண்களிடையே மீண்டும் திலகவதிகளும், மங்கையர்கரசிகளும், காரைக்கால் அம்மையார்களும் அவதரிக்கட்டும் உலகம் தழைப்பதற்கான வித்து பெண்களிடம் தான் உள்ளது போன்ற ஆணித்தரமான கருத்துகள் நூலுக்கு மெருகூட்டுகின்றன.பாதிப்பிற்கும், பலவீனத்திற்கும் ஆட்பட்டு வரும் இன்றைய சமூகத்திற்குப் படிப்பினையூட்டும் பயனுள்ள நூலிது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய