முகப்பு » கதைகள் » அம்மாவின் புலம்பல்கள்

அம்மாவின் புலம்பல்கள்

விலைரூ.100

ஆசிரியர் : முகிலை இராசபாண்டியன்

வெளியீடு: கோவன் பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

 எண்.72, எம்.ஜி.ஆர்.சாலை, நங்கைநல்லூர், சென்னை-61.
 
  (பக்கம்: 160)

சிறுகதை இலக்கியம் என்பது கொஞ்சம் படித்தவர்களையும், மெத்தப் படித்தவர்களையும் ஈர்க்கும் தன்மை கொண்ட இலக்கிய வடிவம். அதன் சிறிய வடிவமும் பொருண்மை வெளிப்பாடும் இதற்குக் காரணமாக அமைகின்றன. இந்த சிறுகதை வடிவம், "அம்மாவின் புலம்பல்கள் என்னும் தொகுப்பில் உள்ள, 16 கதைகளிலும் வெளிப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தின் களம், பல கதைகளில் இருந்தாலும் எல்லாரையும் சென்று சேரும் தன்மையுடன் இந்தக் கதைகள் விளங்குகின்றன.
பார்வையற்ற மகனது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற, கவலை கொண்ட ஓர் அம்மாவை, "அம்மாவின் புலம்பல்கள் என்னும் சிறுகதையில் காணமுடிகிறது. அழகிய வடிவம், எடுத்தவுடன் படிக்கத் தூண்டும்தோற்றம், எளிய நடை என்று எல்லா சிறப்புகளையும் கொண்டிருக்கும், ஒரு சிறுகதைத் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us