தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான நாட்களை, இந்த நாவல் பதிவு செய்கிறது. நீலனோ, காலனோ என்று அந்நாள் ஜனங்கள் சொல்லி நடுங்குமாறு, இந்தியர்களைக் கொன்று குவித்த, லெப்டினென்ட் கர்னல் நீல் துரையின் சிலை அகற்றும் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு மறியல், வாணிவிலாஸ் தியேட்டரில், ‘வள்ளி பரிணயம்’ நாடகத்தில் மிஸ்.ரத்னாபாய், பண்டித ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் பாடும்போது போலீஸ் தடுப்பது, போன்ற பல சரித்திர நிகழ்வுகளை நாவல் தொட்டுச் செல்கிறது.
‘எங்கள் குடும்பத்திலிருந்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி என் அம்மா சொன்னாள். சரித்திரம் அவரை அறிமுகப்படுத்தத் தவறியதை உணர்ந்து, சில ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பெரியவரை நான் தேடினேன். அப்போது கிடைத்தது தான் இந்த நதிமூலம்’ என்கிறார் விட்டல் ராவ். மறக்க முடியாத பாத்திரப் படைப்புகளைக் கொண்ட உன்னத நாவல். விட்டல் ராவின் ‘மாஸ்டர் பீஸ்!’
எஸ்.குரு