பள்ளிப் பருவத்தில் அறிவியல் மீதான புரிதல் இல்லாததால், மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதால், அறிவியல் ஆர்வம் என்பது எட்டாக் கனியாகிறது. ஐன்ஸ்டீனை புரிந்து கொள்பவர்கள் ஒட்டுமொத்த அறிவியலையும் புரிந்து கொள்வர் என்பதை தன் புத்தகம் மூலம் உணர்த்தியுள்ள ஆசிரியர் முயற்சி சிறப்பானது.
இன்று அதிகம் விவாதிக்கப்படும், பரவெளி (ஸ்பேஸ்) குறித்து தொல்காப்பியம், மணிமேகலை என்ன சொல்கிறது என்பதை படிக்கும் போது ஒரு தமிழனாக பெருமையடைய நேரிடுகிறது. ‘ஹாலிவுட்’ படங்களில் கருந்துளை (பிளாக் ஹோல்) குறித்து அரைகுறையாக அறிந்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு, இப்புத்தகத்தில் தீர்வு இருக்கிறது.
–தினா