திருமாலும், பிரம்மாவும் அடிமுடி காண முடியாத இறைவன் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் சிறப்பு மட்டுமல்லாமல், அவரின் பல்வேறு பெருமைகளை தனித்தனி தலைப்புகளில் அழகாக நமக்கு தந்திருக்கிறார் நுாலாசிரியர். சிவ பக்தர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.