முகப்பு » தமிழ்மொழி » கம்பரின் காவிய அமுதம்

கம்பரின் காவிய அமுதம்

விலைரூ.280

ஆசிரியர் : வாகையூர் வெ.பாலுசாமி

வெளியீடு: பாரத் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
கம்ப ராமாயணத்தை எளிய தமிழில் உரைநடையில் படிக்க, இந்நுால் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு காண்டத்தின் இன்றியமையாத பகுதிகளை விளக்கியும், இன்றியமையாத செய்யுள்களைக் கூறியும், தொடர்ச்சியாகப் படிக்கும்படி எழுதியுள்ள நுாலாசிரியரின் எழுத்தாற்றல் பாராட்டத்தக்கதாகும்.
நுாலின் இறுதிப் பகுதியான பிற்சேர்க்கையில், காவியத்தில் உள்ள சொற்கோவைகளும், காவியத்தில் உள்ள பழமொழிகளும், காவிய மாந்தர்களின் சிறப்புப் பெயர்களும், காவியத்தில் உள்ள அறிவியல் செய்திகளும் கூறுவது, நுால் படிப்போருக்கு மிகவும் பயனளிக்கும்.
பொறியாளர் ஒருவர், கம்பன் காவியத்தைப் பழகு தமிழில் எழுதியுள்ள தன்மையைப் பாராட்டி வரவேற்பது தமிழனின் கடமையாகும்.
பேராசிரியர் டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us