இலங்கையில், ராமாயண சம்பவம் நடந்த இடங்களை விளக்கும் நுால். இலங்கையின் மலைப்பிரதேசமான நுவாரலியாவில், ‘சீதாஎலியா’ என்ற வனப் பிரதேசம் இருக்கிறது. அங்கே சீதா, நீராடி பொழுதைக் கழித்ததாகச் சொல்லப்படுகிறது. இலங்கையும், ராமாயணமும் பிரிக்க முடியாத ஒன்று. இந்த நுாலைப் படித்தால், இலங்கையில் அந்த இடங்களை தேடி பயணிக்கும் ஆசை ஏற்படும். – பேராசிரியர் இரா.நாராயணன்