கலகக்காரராக சித்தரிக்கப்படும் நாரதரின் புராணத்தை எளிய நடையில் விவரிக்கும் நுால். பக்தி பனுவலாக கூறப்பட்ட நிகழ்வுகள், சிறு கதைகள் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற உன்னத தத்துவத்தை உணர்த்துகிறது. சிறு தலைப்புகளில், 18 பிரிவுகளாக எழுதப்பட்டுள்ளது. நவரசங்களுடன் உள்ளது. ஆன்மிக நுால்களை படிக்கும் போது, பொறாமை, கோபம், ஆணவம் என்ற துர் பண்புகள் விலகும். இந்த நுாலை வாசிக்கும் போதும் அந்த அனுபவம் கிடைக்கும்.
– கிருஷ்ணவேணி