முகப்பு » ஆன்மிகம் » மீண்டும் பச்சைப்புடவைக்காரி

மீண்டும் பச்சைப்புடவைக்காரி

விலைரூ.300

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பச்சைப்புடவைக்காரியின் மேல் பித்தனாகி போன நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமியின் மற்றொரு படைப்பு மீண்டும் பச்சைப்புடவைக்காரி. 
அதென்ன... வாய் ஓயாமல் அன்னை மீனாட்சி, பராசக்தி, உமா மகேஸ்வரி, பார்வதி என அன்னையின் சொரூபங்களை, ஆனந்த ஆராதனைகளை அடுக்கி கொண்டே போகிறார் எனத் தோன்றலாம். அம்மாவை எத்தனை முறை அழைத்தாலும் அத்தனை முறையும் உள்ளிருந்து ஊற்றெடுக்கும் பாச உணர்வு தான், நுால் ஆசிரியரின் மீனாட்சியின் மீதான பக்தி உணர்வு. 
இந்த பக்தியை தராசு தட்டில் வைத்து எடையிட முடியாது. புத்தகத்தை படிக்கும் போது ஏற்படும் பரவச உணர்வின் வாயிலாக அவரது எழுத்தை எடை போட முடியும். சிலரின், ‘வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்’களைப் பார்க்கும்போது, சோர்ந்துபோன நம் மனதுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்வது போலிருக்கும். 
யாரோ யாருக்காகவோ சொல்லப்பட்ட செய்தி தான். ஆனால், நமக்கும் பாடமாக அமைகிறதே அதுபோல தான் பச்சைப்புடவைக்காரியில் வரும் கதைகள், நம்மை சுற்றி சுழலும் நிஜ கதாபாத்திரங்களின் பிம்பங்கள். நம்பிக்கை என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். இந்த புத்தகத்தை படித்த பின் மீனாட்சியின் அருள் நமக்கும் கிடைக்கும் என, மனது நம்பிக்கை கொள்ளும்.
எம்.எம்.ஜெ., 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us