சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள், தத்துவத்தை எளிய நடையில், இனிய தமிழில் வழங்கியுள்ள நுால். தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தின் விளக்கம், அதன் பயனை எளிமையாக சொல்கிறது. பரம்பொருள் உயிர்களை ஈடேற்றும் கருவியாக இது உள்ளது. உயிர்களை ஆணவத்திலிருந்து விடுவிக்க தொடர்ந்து இயங்கும் கூத்தப் பெருமானை பற்றி விளக்குகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நுால். – பேராசிரியர் இரா.நாராயணன்